ஆற்றில் மிதந்த பெண் பிணம்.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் ஆற்றில் மிதந்த பெண் பிணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் சண்முகநதி ஆறு அணைக்கட்டில் நேற்று பெண் பிணம் ஒன்று மிதந்துள்ளது. இந்நிலையில் அணைக்கட்டில் குளிப்பதற்காக வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரனூர் போலீசார் மற்றும் பழனி தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இருந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர். பின்பு போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆற்றில் இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Body of a woman floating in the river in Dindigul


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->