நீல நிறமாக மாற்றமடைந்த சென்னை கடல்..! அதிர்ச்சியில் மக்கள்.. ஆராய்ச்சியாளர்கள் கூறிய தகவல்..!
blue shimmer on the waves...
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் நேற்றிரவு கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக இன்ஸ்டா கிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதனால் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நள்ளிரவில் கடற்கரை பகுதிகளில் திரண்டனர். திருவான்மியூர் கடற்கரையில் திரண்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். அவர்கள் அந்த அறிய காட்சியாய் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களிலும் புகைப்படம் எடுத்து வியந்தனர்.
இந்த சம்பவத்தால் சென்னை நகரின் கடற்கரை பகுதிகள் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் கடற்பாசிகள் அல்லது நைட்ரஜன் கழிவுகளால் கடல் நீர் நீல நிறமாக மாறியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
English Summary
blue shimmer on the waves...