பிறந்த நாளன்று சாமியாரிடம் ஆசி வாங்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்.!    - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் திருநின்றவூரில் பிறந்த நாளில் வி‌ஷவாயு தாக்கி வாலிபர் பலியான சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை அளித்திருக்கிறது.

திருவள்ளூரை அடுத்த பெரத்தூர், மாந்திப்பை பகுதியில் வாழ்ந்து வருபவர் முனுசாமி. இவரது மகன் சம்பத்குமார் ( 24).

சம்பத்குமார் தனது பிறந்த நாள் என்று திருநின்றவூர் ஓம்சக்தி நகரில் உள்ள சாமியார் ஒருவரை சந்தித்து ஆசி பெறுவதற்காக தனது நண்பரான நரேந்திரன் என்பவருடன் சென்றார்.

அந்த சமயம் சாமியாரின் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு இருந்திருக்கிறது. இதனை சரி செய்ய சம்பத்குமார் முயன்றார்.

இதனால் வி‌ஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் நரேந்திரன் அவரை காப்பாற்ற முயன்றார்.

மேலும் வி‌ஷவாயு தாக்கியதில் நரேந்திரனும் மயங்கியுள்ளார். 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவர்களையும் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சம்பத் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நரேந்திரனுக்கு தொடர்ந்து தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blessings to the preacher on the birthday death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->