காட்டுப்பகுதியில் கருப்பான உருவம்.! அருகே சென்ற இளைஞர்கள் செய்த காரியம்.!
black figure in sathiyamangalam forest
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை என பல்வேறு வகையான வன விலங்குகள் இருக்கின்றன. இதில், யானை, மான், கரடி ஆகிய விலங்குகள் அந்த காட்டுப்பகுதி வழியே வந்து, சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்து செல்வது வழக்கமாக நடைபெறும் ஒன்று தான்.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது காட்டோரம் இருந்த அந்த ரோட்டு பகுதியில் கருப்பாக ஒரு உருவம் படுத்து கிடந்துள்ளது. அது என்னவென்று பார்க்கும் ஆர்வத்தில் அவர்கள் பைக்கை நிறுத்திவிட்டு அருகில் வந்தனர்.
அந்த உருவம் கரடி என்று கந்துகொண்டனர். கரடி நன்றாக உறங்கி கொண்டிருக்க அதனுடன் புகைப்படம் எடுத்த்துக்கொண்டனர். உடனே இருவரும் செல்போனில் அதை வீடியோ எடுத்துகொண்டனர். ஆனால் கரடி அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. கரடியை எழுப்ப முயற்சித்து தோற்று போன அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
English Summary
black figure in sathiyamangalam forest