ரெய்டுன்னா அவுங்களே வைக்கிறதும், எடுக்குறதும் வழக்கம் தானே.. பாஜகவின் முக்கியப்புள்ளி பேட்டி.! - Seithipunal
Seithipunal


ரெய்டுனா பணத்தை அவுங்களே கொண்டு போயி வைக்கிறதும், அதை அவுங்களே எடுக்குறதும் வழக்கம் தானே என கருத்து தெரிவித்த பாஜக வி.பி துரைசாமி, மறைமுகமாக எம்.ஆர் விஜேபாஸ்கருக்கு ஆதரவாக இருப்பது போல பேசி சென்றார். 

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், இந்த சந்திப்பின் போது பாஜக சார்பில் துரைசாமி, எம்.என் ராஜன் மற்றும் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இருந்தனர். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வி.பி துரைசாமி பேசுகையில், அதிமுக - பாஜக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருகிறது என எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். இது இக்கட்சியின் நல்லுறவை எடுத்துரைக்கிறது. 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ரெய்டு என்று கூறினாலே பணத்தை அவர்களே வைத்து அவர்களே மீண்டும் எடுப்பார்கள். இது நாட்டில் வழக்கமாக நடப்பது தான் " என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP VP DuraiSamy Pressmeet about Former Minister Vijayabaskar Raid Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->