அண்ணாமலை தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு மின்சாரம் திருடிய பாஜகவினர்! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளியில் இருந்து திருடப்பட்ட மின்சாரம்!

நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. மரக்கன்றுகளை இலவசமாக வழங்குதல், தெருக்களை சுத்தம் செய்தல், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பது போன்ற நிகழ்ச்சிகள் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விருதாச்சலம் அருகே அலிச்சகுடி கிராமத்தில் அண்ணாமலை தலைமையில் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா, அங்குள்ள அரசு பள்ளியில் அன்னதானம் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இந்த நிகழ்ச்சியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலி ஒளி நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு தேவையான மின்சாரத்தை அருகில் உள்ள அரசு பள்ளியின் கட்டிடத்தின் மின் மீட்டர் இருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பு எடுத்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசு பள்ளியிலிருந்து மின்சாரத்தை எடுத்து பாஜகவினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து இருக்கலாம். இப்போதாவது தமிழக பாஜகவிற்கு மக்களின் பிரச்சனையை பற்றி அக்கறை வந்துள்ளதே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP stole electricity for the event lead by Annamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->