நிலைப்பாடற்ற ஒரு கட்சி என்றால் அது திமுக மட்டும் தான் - பொன். இராதாகிருஷ்ணன் கடும் தாக்கு.!
BJP Pon Radhakrishnan Pressmeet at Tirunelveli Chettikulam 14 Oct 2021
கடந்த 55 வருடமாக நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சி என்பதை திமுக நிரூபணம் செய்து வருவதாக பாஜக பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செட்டிகுளத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்,
"9 மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கட்சியை சார்ந்த உறுப்பினர்கள், எவ்விதமான களப்பணிகளையும் செய்யவில்லை. வாக்குப்பதிவு சமயங்களின் போதும், வாக்கு எண்ணிக்கை சமயத்தின் போதும் நடைபெற்ற நிகழ்வுகளை கண்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
வாக்குசாவடியினை கைப்பற்றுவது மற்றும் வாக்குகளை மக்கள் பதிவு செய்யவிடாமல் தடுப்பது போன்ற நூதன செயல்களில் திமுகவினர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் பல்வேறு இடங்களில் எழுந்துள்ளது. வாக்குசாவடியை கைப்பற்றி விடலாம் என்று திமுகவினர் நினைத்து இருந்தனர்.
அவர்களின் வெற்றி அதனை உறுதி செய்துவிட்டது. திமுகவின் கடந்த காலா நிகழ்வுகள் எதிர்ப்பும், மறுபுறம் ஆதரவும் தான். கூடங்குளம் அணுமின் நிலையத்தை முதலில் அவர்கள் வரவேற்றார்கள். தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நிலையான நிலைப்பாடுகள் இல்லாத கட்சி திமுக. இதனை கடந்த 55 வருடமாக நிரூபணம் செய்துள்ளது" என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
BJP Pon Radhakrishnan Pressmeet at Tirunelveli Chettikulam 14 Oct 2021