காரில் பயங்கர ஆயுதங்களுடன் பாஜக பிரமுகர் மீண்டும் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு!
BJP person arrested in mayiladuthurai
சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியை சேர்ந்த அகோரம். இவர் பாஜக மயிலாடுதுறை மக்களவை தொகுதி இணை செயலாளர். இவர் கடந்த மாதம் 31ம் தேதி மயிலாடுதுறையில் நடந்த பட்டேல் பிறந்த நாள் பேரணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தியை தரகுறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 12ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி செம்பனார்கோவில் போலீஸ் சரகத்தில் காரில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அகோரத்தின் ஆதரவாளர்கள் முத்துமுரளிதரதன், சிற்றரசன், சபரிவேலன் ஆகியோர் மீது செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் அகோரத்தையும் சேர்த்து போலீசார் கைது செய்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை 27ம் தேதி வரை காவலில் வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அவரை சிறைக்கு அழைத்துச்சென்ற போது, தன்மீது காவல்துறை பல்வேறு பொய் வழக்குகள் போட முயற்சி செய்வதாகவும், குற்றம் சாட்டி அகோரம் பேசினார். இதனால் நீதிமன்றத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தியது
செய்தியாளர் மணி
English Summary
BJP person arrested in mayiladuthurai