ஓசி சிக்கன் ரைஸ் தரவில்லை மதக்கலவரம் வந்துவிடுமாம்... பாஜக பிரமுகர் போதையில் அடாவடி.!
BJP party Member Violent Speech due to food
சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி முத்தையா தெரு பகுதியில் பாஸ்ட்புட் கடையில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரு நபர் காசு கொடுக்க மறுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார், இதையடுத்து இதுதொடர்பான தகவலை அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு வந்த காவல்துறையினரிடம் ரகளை செய்தவன் தன்னை பாஜக கட்சியின் பகுதி செயலாளர் என்று கூறி அலப்பறை செய்து, சாப்பிட்ட சிக்கன் ரைஸுக்கு காசு கேட்டால் மதக்கலவரம் வரும் என்றும் காவல்துறையினர் முன்னதாகவே மிரட்டியுள்ளான்.
இதனையடுத்து அவன் போதையில் இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர், விசாரணைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்காமல் தயங்கி நின்றனர். மேலும், போதையில் வாகனத்தில் ஏற்றி செல்கையில் வேண்டும் என்றே கீழே குதித்துவிட்டு காவல்துறையின் மீது பழிசுமத்தினால் என்ன செய்ய இயலும் என்றும் விழிபிதுங்கி இருந்தனர்.
ரகளையில் ஈடுபட்டவன் அதோடு விட்டுவிடாமல், தனது அருகில் நின்ற நபரை இந்து முன்னணியைச் சார்ந்தவர் என்று அறிமுகம் செய்து, அங்கிருந்து சண்டையிட்டவாறே சென்றான். இறுதியாக நான் யார் என்று தெரியுமா?. அமித்ஷாவுக்கு போன் போடவேண்டுமா?. அமித்ஷாவின் பி.ஏவிற்கு போன் போடவேண்டுமா?. 100 பேர் படையுடன் தயாராக உள்ளனர். வரவழைத்தால் இந்த இடமே கலவரம் ஆகிவிடும் என்று காவல் துறையினர் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்து சென்றான்.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இருவரும் திருவெல்லிக்கேணி பாஜகவின் மேற்கு தொகுதி செயலாளர் பாஸ்கர் மற்றும் புருஷோத்தமன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
BJP party Member Violent Speech due to food