மதுரையில் பாஜகவின் முக்கிய நிர்வாகி வெட்டிக் கொலை..! பரபரப்பில் அரசியல் களம்.!!
bjp member murder in madurai
மதுரையில் பாஜக மீனவர் அணி துணைத் தலைவர் முத்துப்பாண்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முத்துப்பாண்டி பாஜக மீனவர் அணி துணைத் தலைவராக பொறுப்பேற்று உள்ளார். இதையடுத்து, அவரை தேடி மர்ம நபர்கள் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர் வீட்டில் இல்லாததால், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கினர். இதையடுத்து அந்த கும்பல் அவரை தேடி மதுரையில் சுற்றி வந்துள்ளது.
முத்துப்பாண்டி டீக்கடையில் நின்று கொண்டிருப்பதை கண்ட அந்த கும்பல், அவரை தாக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட முத்துப்பாண்டி அங்கிருந்து தப்பி ஓட முயன்ற உள்ளார். ஆனாலும் விடாமல் துரத்திய கும்பல், அவரை சரமாரியாக வெட்டினர். இதில் முத்துப்பாண்டி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது. அருகிலிருந்தவர்கள் முத்துப்பாண்டியை மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bjp member murder in madurai