அண்ணாமலையிடம் வாயை கொடுத்து வாங்கி கட்டிய திமுக எம்.பி...! பிளைட் அனுப்புவீங்களா ஆபீசர்?.!
BJP Annamalai tweet about DMK MP Dhayanidhi Maran Statement 1 July 2021
கர்நாடக மாநிலத்திலுள்ள மேகதாது தமிழக-கர்நாடக எல்லை ஒட்டி இருக்கும் நிலையில், அங்கு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு பல வருடமாக முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது அணைகட்டும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளது.
இதற்கு தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இருதரப்பும் மத்திய ஆட்சியாளர்களை சந்தித்து வருகிறது. தமிழகம் சட்டரீதியான போராட்டத்தில் களமிறங்கியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு நாங்கள் மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் வராது, தமிழகத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.
பெங்களுரூவின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு நாங்கள் அணையை காட்டுகிறோம் என்று விளக்கம் அளித்து, அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக பாஜக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பாஜக சார்பில் வரும் 5 ஆம் தேதி தஞ்சாவூரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக திமுக எம்.பியான தயாநிதி மாறனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தயாநிதிமாறன், " தமிழக பாஜக போராடினாலும், மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் சுமுக தீர்வு காண்பதற்கு மாவீரன் அண்ணாமலையை நாங்கள் தூதுவராக அனுப்புவோம் " என கலாய்ப்பது போல கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா நோய் தொற்றால் மக்கள் துன்புற்று இருந்தபோது டி 20 விளையாட்டு போட்டியை ரசித்து கொண்டிருந்த தயாநிதி மாறன் அவர்கள்., மேகதாது அணை பற்றி கவலைப்பட்டதற்கு மிகுந்த நன்றி..
தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால், நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்து கொண்டு தூது செல்ல நான் தயாராக உள்ளேன். இதை அவர் மாமா தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அனுமதி அளிப்பாரா? " என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai tweet about DMK MP Dhayanidhi Maran Statement 1 July 2021