#வேலூர் || பைக் மீது கண்டைனர் லாரி மோதி விபத்து - வாலிபர் பலி - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் பைக் மீது கண்டைனர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வல்லண்டராம் வசந்தம் நகரை சேர்ந்தவர் பரந்தாமன்(33). இவர் கொணவட்டம் போக்குவரத்து பணிமனையில் அரசு பேருந்து கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக பைக்கில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேல்மொணவூர் வங்கி அருகே சென்றபோது,  பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி எதிர்ப்பாராதவிதமாக பரந்தாமன் பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பரந்தாமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த விரிஞ்சிபுரம் காவல்துறையினர் உயிரிழந்த பரந்தாமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bike lorry accident in Vellore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->