தவறான திசையில் வந்த இருசக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபரீதம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு அருகில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

எறையூர் சர்க்கரை ஆலை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஒருவருடன் எறையூர் அடுத்த சின்னாறு பகுதியில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். 

அப்போது சுற்றிச் செல்வதை தவிர்ப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் தவறான திசையில் சென்றுள்ளார். அப்போது பெரம்பலூரில் இருந்து தொழுதூரை நோக்கி சென்ற ஜேசிபி வாகனம் ஆனந்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென வலது புறமாக திரும்பியுள்ளது. அந்த நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஜேசிபி வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதை தொடர்ந்து ஜேசிபி வாகனம் இருசக்கர வாகனத்தின் மீதி மோதியதில் ஆனந்த் சாலையோரம் தூக்கி வீசப்பட்டுள்ளார். அப்போது பனை மரத்தின் மட்டையில் பட்ட  ஆனந்தின் கழுத்து பலமாக அறுபட்டுள்ளது.

உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவரும் ஜேசிபி மற்றும் லாரி ஓட்டுநர்கள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bike accident while driving on wrong route


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->