இன்று 74 பேருக்கு கரோனா உறுதி.. சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி.!!
Beela rajesh update about corona virus positive and death
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த விபரத்தை தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய பீலா ராஜேஷ், தமிழகத்தில் ஏற்கனவே 411 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று 74 பேர் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையை சார்ந்த ஒரு நபர் வெளிநாட்டை சார்ந்தவருடன் தொடர்பில் இருந்த நிலையில், இவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சமூக விலகலை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 422 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு தேவையான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக வீட்டு கண்காணிப்பில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை 90,543 ஆகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Beela rajesh update about corona virus positive and death