B.Ed. படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.!
B.Ed course apply from tomorrow
B.Ed. படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் B.Ed படிப்புகளில் சேர நாளை முதல் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்த விபரங்களை மாணவர்கள் https://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் அக்டோபர் 6-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என்றும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே B.Ed மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed மாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு கட்டாயம் என்றும் இளைய தளம் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தனியார் கல்லூரியில் சேர அந்தந்த கல்லூரி இணையதளத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
B.Ed course apply from tomorrow