திருநங்கையாக மாறிய மகன்.. ஆணாகவே இருக்க ஹார்மோன் ஊசி செலுத்த அழைத்த தாய்.. இறுதியில் நடந்த விபரீதம்..!
Beaten to death transgender who refuses to inject hormones to stay male
ஹார்மோன் ஊசி போட மறுத்ததால் திருநங்கையை தாயே அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், அம்மாபாளையத்தில் வசித்து வருபவர் உமாதேவி (45). இவரது மகன் நவீன் குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர், கடந்த தீபாவளி அன்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் இளைஞர் ஒருவருடன் ஏற்காடு சென்று வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து, மறுநாள் அவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினருக்கு உமாதேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
தனது மகன் திருநங்கையாக மாறியது அவருக்கு பிடிக்கவில்லை மேலும், அவர் மற்ற திருநங்கைகளுடன் அவரின் வீட்டிலேயே தங்கிவிடுவார்ளோ என பயந்து போன அவர் மற்றவர்களிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
அவரிடன் தெரிந்தவர் ஒருவர் திருநங்கையாக மாறுவர்கள் ஆணாக இருக்க ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதாக தெரிவிக்க அவர் தனது நவீன்குமாரிடம் இது பற்றி அவர் கூறியுள்ளார்.
அதற்கு நவீன்குமார் தான் திருநங்கையாகவே வாழ விரும்புவதாகவும் தன்னை எங்கும் அழைக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அவரை ஹார்மோன் ஊசி செலுத்த அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார்.
அதற்க்காக அவரின் கால்களை உடைத்து அதற்கு மருத்துவம் பார்ப்பது போல அழைத்து செல்ல முடிவு செய்து அதன்படி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அவரது காலை உடைக்க சொல்லியுள்ளார். அப்போது அவர்கள் வாயை பொத்தியதில் அவர் மயங்கியுள்ளார். இதனால், பயந்து போன அவர்கள் காட்டுபகுதியில் தூக்கி வீசிவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உமாதேவியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Beaten to death transgender who refuses to inject hormones to stay male