இடிவிழுந்து இறந்த சிறுவர்கள்! பிணவறை வாசலில் லஞ்சத்திற்கு பேரம் பேசிய பணியாளர்! வெளியான வீடியோ!   - Seithipunal
Seithipunal


லஞ்சம் வாங்கியதோடு மட்டும் இல்லாமல் மேலும் பேரம் பேசிய பிணவரை பணியாளரால், சிறுவர்களை பறிகொடுத்த பெற்றோர்கள் தவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா, ஸ்ரீமுஷ்ணம் நகரத்தைச் சார்ந்த இரண்டு சிறுவர்கள், இரண்டு தினங்களுக்கு முன் இடி விழுந்து பரிதாபமாக பலியானார்கள். சம்பவ இடத்திலேயே பலியான அவர்கள் இருவரது உடலையும் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு பணி செய்யும் பெண் ஒருவர் ஏற்கனவே லஞ்சம் வாங்கிய நிலையில், மேலும் 500 ரூபாய் கொடுங்கள் என பேரம் பேசிய சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்கனவே மக்கள் பணப்புழக்கம் இல்லாமல் சிரமத்துடன் இருக்கும் நிலையில், மகன்களை இழந்த பெற்றோர்களிடம் மேலும் பணம் கொடுக்க சொல்லி பேரம் பேசியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பெண் பணியாளர் பேரம் பேசி பணம் வாங்கும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற கடினமான காலங்களிலும் லஞ்சம் வாங்குவதை பார்த்து மனிதம் மரணித்து விட்டதா என குமுறுகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண் பணியாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bargaining employee in mortuary


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->