பாலியல் பலத்தகார வழக்கில் குற்றவாளிகளுக்கு இயற்கை மரணம் வரை சிறை.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 ஆம் ஆண்டு கும்பகோணத்திற்கு பணி நிமித்தமாக வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை நள்ளிரவில் கடத்தி சென்று 4 வாலிபர்கள் கதற கதற கற்பழித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த இளம் பெண் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் 23 வயது நிரம்பிய அந்த இளம் பெண் பதவி உயர்வு பயிற்சிக்காக கும்பகோணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இதற்காக டெல்லியில் இருந்து ரயில் மூலமாக சென்னை வந்த அந்த இளம்பெண் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி திருச்செந்தூர் விரைவு ரயிலில் இரவு பத்தரை மணிக்கு வந்துள்ளார்.

 பின்னர் டெல்லியில் இருந்து ஏற்கனவே கும்பகோணத்தில் அந்த வங்கி பயிற்சிக்கு வந்திருந்த தனது தோழிகளுக்கு தொடர்பு கொண்டு ரயில் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அந்த சமயத்தில் மழை பொழிவதால் சிறிது நேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்த அந்த அவர்கள் வராததால் இளம்பெண் தன் தோழிகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் தங்கி உள்ள ஓட்டல் விவரங்களை கேட்டுள்ளார்.

இதையடுத்து நள்ளிரவு 12 மணி ஆகியது ரயில் நிலையத்தில் ஆட்டோ ஏதும் இல்லாததால் மழையில் நனைந்தபடி ரயில் நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்துள்ளார். அப்போது ரயில் நிலையத்தை யாரோ ஒருவரை இறக்கிவிட வந்த வெளியூர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி தான் செல்லவேண்டிய ஹோட்டல் விவரங்களை அந்த இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் கூறியுள்ளார். 

முதல் முறையாக கும்பகோணம் வந்ததால் அந்த பெண்ணுக்கு சரியான வழி தெரியவில்லை அந்த பெண் இந்தியில் பேசி கொண்டே வந்ததால் அந்த ஆட்டோ டிரைவர் அதிக பணம் வசூலிக்கலாம் என எண்ணி வெவ்வேறு பாதையில் சுற்றி சுற்றி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் தன்னுடைய பாதையில் திசை மாறி செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் இன்னும் சிறிது தூரத்தில் ஹோட்டல் வந்துவிடும் என கூறிக்கொண்டு தொடர்ந்து ஆட்டோவில் சுற்று சுற்றி வந்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளம்பெண் டெல்லியில் உள்ள தன்னுடைய தமிழ் தெரிந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிவந்துள்ளார். இதனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை செட்டிமண்டபம் பைபாஸில் நள்ளிரவில் நடு வழியில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.

அதன் பிறகு அந்த பெண் தன்னுடைய ட்ராலியை இழுத்துக்கொண்டு மண்டபத்திலிருந்து நள்ளிரவில் சாலையை நடந்து வந்துள்ளார் அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நான்கு பேரில் ஒருவர் அந்த பெண்ணை தனியாக நடந்து வருவதை கண்டு அந்த பெண்ணிடம் தமிழில் பேசி உள்ளனர். ஆனால் அந்த பெண் தமிழ் புரியாததால் ஆங்கிலத்தில் அந்த நபரிடம் ஹோட்டல் வழியை கேட்டுள்ளார். உடனே அந்த வாலிபர் நான் மோட்டார் சைக்கிளில் வந்து விடுவதாக கூறி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு அந்தப் பெண்ணுக்கு பின்னால் மற்றொரு வாலிபரும் ஏறிக்கொண்டார் இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு நாச்சியார்கோவில் பைபாஸ் ரோட்டிற்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மற்ற 2 பேரையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரை வைத்து அந்த பெண்கள் நான்கு பேரும் சேர்ந்து கதற கதற கற்பழித்தனர். அந்தப் பெண் இரண்டு மணி நேரம் அந்த நான்கு பேருடன் போராடியுள்ளார்.

இதையடுத்து இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார், குருமூர்த்தி உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கும்பகோணம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய தினேஷ், புருஷோத்தமன், அன்பரசன், வசந்த் உள்ளிட்ட நான்கு பேருக்கும் அவர்கள் இயற்கையாக மரணமடையும் வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளிகள் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டரை லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, தமிழக அரசு சார்பிலும் நிவாரணத் தொகை வழங்க அறிவுறுத்தினார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bank staff rape case judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->