வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என வங்கியில் கொள்ளை முயற்சி..!! கைது செய்தது காவல்துறை..!!
Bank Robbery attempt near namakkal
வாழ்கையில் பெரியதாக செட்டிலாக வேண்டும் என்ற நோக்கில் கொள்ளையில் ஈடுப்பட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள இந்நியன் வங்கி கிளையில் சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் தொடர் கொள்ளை முயற்சி நடைபெற்றது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு வந்து விசாரணையில் ஈடுப்பட்டனர். அங்கு கை ரேகை நிபுணர்கள் வரவைழக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அங்கு கொள்ளை முயற்சி மட்டுமே நடைபெற்றது எனவும் பணம் நகை எதுவும் கொள்ளை போகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து திருச்சங்கோடு பகுதியில் நடந்த வழிப்பறியில் இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், வாழ்க்கையில் பெரியதாக செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து சரவணகுமார் மற்றும் அஜித் குமார்(18) என்ற இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Bank Robbery attempt near namakkal