தண்டோராவிற்கு உடனடியாக தடை! தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தண்டோரா போடுவதற்கு தடை விதித்து, அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி இருக்கிறார்.

அவர் கைப்பட எழுதப்பட்ட கடிதத்தில், "மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதத்தில், இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது, இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டிய தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வர செய்வதன் மூலம் மூலை முடுக்குகளில் எல்லாம் தகவல்களை கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி செயல்படுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருமளவு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்." என அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி இருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban to thandaora in tamilnadu order by chief secretary


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->