மதுரை விமான நிலையத்திற்கு குண்டுவெடிப்பு?! போலீசாருக்கு கிடைத்த கடிதம்!!
balm alert to madurai airport
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு தமிழகத்தில் விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்பட பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகரன், பாஸ்கரன் ஆகியோர் தங்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிக்க கூடாது என்றும், அப்படி விசாரித்து நடவடிக்கை எடுத்தால் மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி மகேந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் சந்திரசேகரன், பாஸ்கரனை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தமிழகத்திலும் அடுத்த 3 மாதத்தில் தொடர் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த மதுரையை சேர்ந்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெடி குண்டு மிரட்டம் அழைப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
balm alert to madurai airport