பால் பாயின்ட் பேனாக்களுக்கு தடை.! குடியரசு தினத்தில் இருந்து நடைமுறைக்கு வந்தது.!
ball point pens banned in nelagiri
தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமான நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி மாவட்ட நிர்வாகமும் குடிநீர் கேன், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் பால் பாயின்ட் பேனாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசித்துவருபவர்கள் பிளாஸ்டிக் பால் பாயின்ட் மற்றும் ஜெல் பேனாக்கள் பயன்படுத்தி வீசப்படுகிறது, இதனால் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நாள்தோறும் 500 கிலோ வரை பேனாக்கள் சேகரிக்கப்படுகிறது.
இதையடுத்து, முதற்கட்டமாக நகராட்சி அலுவலத்தில் பான் பாயின்ட் பேனாக்களுக்கு பதிலாக இங்க் பேனாக்கள் பயன்பத்தப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறை குடியரசு தினத்தில் இருந்து இது நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
ball point pens banned in nelagiri