பாஜக தலைவரின் தம்பி பிணமாக மீட்பு!!
Bajaga leader brother murder
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே செண்பகதோப்பு பேயனாற்று ஓடையில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, சென்று பார்த்த போது அழுகிய நிலையில் 35 வயது உடைய ஒரு ஆண் சடலம் இருந்தது. மேலும் சடலத்திற்கு அருகிலேயே தலை இல்லாமல் பெரிய மிளா மானும் கிடந்தது.
பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, சடலத்தின் சட்டை பையில் இருந்த ஓட்டுநர் உரிமத்தை வைத்து நடத்திய விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பாஜக நகர தலைவரின் தம்பி கணேசன் சடலம் என தெரிய வந்தது.
மேலும் சடலத்தின் தலையில் டார்ச் லைட் கட்டி இருந்ததாலும், சடலம் அருகே மிளா மான் இருந்ததாலும் வேட்டையாடும் போது இறந்தாரா? அல்லது யாராவது மர்மநபர் கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா? என்ற கோணத்தில் மம்சாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Bajaga leader brother murder