துண்டான தலை, சிக்கிக் கொண்ட உடல்! சுயபிரசவத்தின் போது நேர்ந்த நெஞ்சை உருக்கும் விபரீதம்.!
baby head cut while normal delievery
காஞ்சிபுரம் மாவட்டம் கடலூரில் வசித்து வருபவர் தியாகராஜன். இவரது மனைவி பொம்மி. 20 வயது நிறைந்த இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை பொம்மிக்கு வலி ஏற்பட்ட நிலையில் அவர் பிரசவத்திற்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவருக்கு சுகப்பிரசவமாக வாய்ப்பு உள்ளதாக கூறிய மருத்துவமனை நர்ஸ் முத்துகுமாரி பொம்மிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்பொழுது குழந்தை தலை திரும்பி வெளியே வர உள்ள நிலையில், குழந்தையின் தலை மட்டும் துண்டாக வெளியே வந்துள்ளது .குழந்தையின். உடல் பகுதி தாயின் கருப்பைக்குள்ளேயே சிக்கிக்கொண்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொம்மியின் குடும்பத்தார்கள் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, அறுவை சிகிச்சை மூலம் தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. மேலும் பொம்மிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பொம்மியின் குடும்பத்தார்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
baby head cut while normal delievery