70 ரூபாய்க்கான குழந்தையை பலி கொடுத்த தந்தை.!! குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


முசிறியை சேர்ந்த ரங்கன் என்பவருக்கு 15 மாத குழந்தையை இருக்கிறது. விக்னேஸ்வரன் என்று அந்த குழந்தையை வீட்டிற்கு வெளியில் தூக்கி கொண்டு வந்த ரங்கன், தனது உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செந்தில் என்பவர் ஆனந்தின் சட்டைப்பையில் இருந்து 70 ரூபாயை, அவரைக் கேட்காமல் எடுத்துள்ளார்.

இதனை திருப்பி கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செந்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையை எடுத்து ரங்கனை அடிக்க முயன்ற போது, அது குறி தவறி குழந்தையின் மீது பட்டது. இதன் காரணமாக குழந்தை மயங்கி சரிந்து.

baby death,trichy,seithipunal

பின்னர் விபரீதத்தை உணர்ந்த ரங்கன், குழந்தையை தூக்கிக் கொண்டு உடனடியாக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதன் காரணமாக அந்த குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். குழந்தையை கொன்ற செந்திலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby death in trichy musiri


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->