உயிரை பறித்த அதிவேக பயணம்...! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்ரப், இவருக்கு வயது 35. இவர் சென்னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இவர் சென்னை சென்றுகொண்டுருந்துள்ளார்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் பெருமாள் பாளையம் அருகே வந்துகொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் அவரின் கட்டுபாட்டை இழந்து முன்னே சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஸ்ரப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அஸ்ரப்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகத்தில் சாலைகளில் பயணிக்க வேண்டாம் என காவல்துறையினர் கூறிவருகின்றனர் அதனை செவிமடுக்காமல் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayoung man died on the spot in a road accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->