வீரத்தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்.! தமிழக அரசின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பலரும் வயதான தம்பதியர் கொள்ளையர்களை விரட்டியடித்த சிசிடிவி பதிவை கண்டு வியப்படைந்தனர் மேலும் பலர் பாராட்டுகளை அள்ளி தெளித்தபடி இருக்கிறார்கள்.

மேலும் அவர்களது இந்த தைரியமான செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரும் நேற்று தம்பதியரின் வீட்டிற்கு நேரடியாக சென்று பாராட்டு தெரிவித்தார். 

அப்போது அந்த தம்பதி கொள்ளையர்களை விரட்டியடித்த விதம் குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் விரிவாக கூறினார்கள். அதை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு தம்பதியரை வெகுவாக பாராட்டினார்.

இந்தநிலையில் கொள்ளையர்களை விரட்டியடித்த வயதான தம்பதியருக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. எனவே நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார்.

இதன் காரணமாக தம்பதிக்கு நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படலாம் என தெரிகிறது. அதனை உறுதிபடுத்தும் விதமாக சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய இருவரும் அம்பை தாசில்தார் வெங்கடேசுடன் இன்று மதியம் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

award for nellai old couples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->