சாலையில் கிடந்த பணம்.. ஆட்டோ ஓட்டுனரின் நெகிழ்ச்சி செயல்.. மனமார பாராட்டுக்கள்.! - Seithipunal
Seithipunal


கேட்பாரற்று சாலையில் கடந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை, ஆட்டோ ஓட்டுநர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்ற பழமொழியானது நமக்கு நன்கு தெரிந்த ஒன்று. ஆனால், சில நேரங்களில் கட்டுக்கட்டாக பணத்தை பார்த்தாலும், அதனை உரியவரிடம் சேர்க்கும் பொருட்டு காவல் துறையினரிடம் வழங்கும் நெகிழ்ச்சி சம்பவமும் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி சீனிவாசபுரம் பகுதியைச் சார்ந்தவர் சந்திரமோகன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று வடக்கு ரத வீதியில் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்துள்ளார்.

இதன்போது, சாலையில் பணகட்டு ஒன்று கிடப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து பணத்தை எடுத்த ஆட்டோ ஓட்டுனர், அங்கிருந்த காவல் நிலையத்திற்கு சென்று பணத்தை ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், சந்திரமோகனின் நேர்மைக்காக பாராட்டு தெரிவித்து, உரியவரிடம் பணம் கொண்டு சேர்க்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto Driver handed over the money left unasked in Avinashi Tiruppur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->