சுற்றுலா வந்த ஆஸ்திரேலிய பெண்ணிடம் சில்மிஷம் செய்த மதுரை இளைஞர்.!
australia girl sexual harassment by madurai boy
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தால், மதுரையை சேர்ந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா வந்திருக்கிறார். மதுரைக்கு வந்த பெண் ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தனது இருப்பிடத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த நேரு நகரை சேர்ந்த ஸ்ரீதரன் என்ற இளைஞர் ஒருவர் அந்த பெண்ணுடன் செல்பி எடுப்பதாக கூறி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, அந்த ஆஸ்திரேலியா பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீதரனை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
English Summary
australia girl sexual harassment by madurai boy