தமிழகத்தை புரட்டிப் போடப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
aug 05 weather report in tamilnadu
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென்மேற்கு பருவகாற்று, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் மலைச்சரிவில் அதிக கன மழையும், கோவை, தேனி மாவட்டங்களில் மலைப்பகுதியில் கனமழை முதல் மிதமான மழையும் பெய்ய பெய்யும் பெய்யக்கூடும்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
aug 05 weather report in tamilnadu