அதிதீவிர கனமழை.. வெள்ளக்காடாக போகும் தமிழகம்.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
aug 04 weather report in tamilnadu
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு காற்றின் மலைச்சரிவு, மழைப்பொழிவு (Orographic rainfall) காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், கோவை மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழையும் மற்றும் தேனி மாவட்டத்தில் மலைப்பகுதியில் கனமழை பெய்யும்.
மேலும், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, மாவட்டங்களில் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 நேரத்தில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் தெற்கு வங்ககடல், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
aug 04 weather report in tamilnadu