சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர்.! ஆத்தூர் அருகே பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்பகனூர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நேற்று தங்களுடைய இருசக்கர வாகனங்களில் ஆத்தூர் நகர பகுதிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த இளைஞர்களை ஆத்தூர் டவுன் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் வழிமறித்துள்ளனர். 

அந்த இளைஞர்களை வழிமறித்து காவல் துறையினர் தகாத வார்த்தையில் திட்டி இருக்கின்றனர். மேலும், அத்துமீறும் விதமாக சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த இளைஞர்கள் படுகாயமடைந்தனர். சிலருக்கு உடலெங்கும் கீறல்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியுள்ளது.  

இந்நிலையில், இதுகுறித்து அப்பகுதியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, இளைஞர்களுக்கு ஆதரவாக பாமக மாவட்ட செயலாளர் எம்.பி நடராஜன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ரவி பச்சமுத்து, பாமக மாவட்ட துணை செயலாளர் செழியன் மற்றும் பாமக நகர செயலாளர் மணிகண்டன் நாயக்கர் உள்ளிட்டோர் ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் காரணமாக பதற்றம் நிலவவே, உடனடியாக ஆத்தூர் டிஎஸ்பி அத்துமீறிய ஆத்தூர் டவுன் காவல் துறையைச் சார்ந்தவர்களான சிவகுரு, சபியுல்லா அலாவுதீன், செல்வகுமார் ஆகியோர்களின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

வன்முறையில் ஈடுபட்ட காவலர்களை பணி இடைநீக்கம் செய்வதாக கூறிய பின்னரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ATTUR POLICE ATTACKED PMK PEOPLES


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->