டாஸ்மார்க் கடையில் ஓட்டையைப் போட்டு ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்.. தேடிச் சென்றது கிடைக்காததால் திரும்பி சென்ற சோகம்.!!
ATTEMPT TO ROB TASMAC
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மது பிரியர்கள், ஒதுக்குப்புறமாக உள்ள இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தி வருகின்றனர். இதனிடையே மேற்பார்வையாளர் அசோக், விற்பனையாளர் ரகுராமன் ஆகியோர் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது, மேலும் கடையின் பின்புறம் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிடப்பட்ட இருந்தது, சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டிருந்தது. கடையின் ஒரு சில பூட்டுகளை திறக்க முடியாததால், சுவரில் துளையிட்டு திருடி சென்றுள்ளனர்.
இதையடுத்து, பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பூர் இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
இந்த கடையில் ஏற்கனவே ஒருமுறை கொலை நடந்துள்ளதால், கடையில் வசூலாகும் பணத்தை பத்திரப்படுத்த லாக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்து முடியாததால், இரண்டு நாட்கள் வசூலான 3 லட்சம் ரூபாயை தப்பித்தது. மேலும் கடையில் வைத்திருந்த மதுபானங்களை சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டுகொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.