பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில், அத்துமீறிய கணவன்.! பொதுமக்கள் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


காதல் திருமணம்:

திருக்கோவிலூர் அருகே இருக்கும் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், எட்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். தமிழ்ச்செல்வியும், சிவகுமாரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

கள்ளத்தொடர்பு:

இதனைத் தொடர்ந்து சிவகுமார் பரோட்டா மாஸ்டர் ஆகவும் தமிழ்ச்செல்வி ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென தமிழ்ச்செல்வி அவருடைய உறவினர் ஒருவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

கணவன் மீது அலட்சியம்: 

சிவகுமார் இதுகுறித்து தெரிந்தவுடன் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அதன் பின்னர் தன்னுடைய மனைவியை கண்டித்து இருக்கின்றார். ஆனால், தமிழ்ச்செல்வி இதையெல்லாம் சற்றும் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் கணவரின் பேசுவதையே நிறுத்திவிட்டார். சமாதானம் செய்ய முயன்றும் தோல்வியில் முடிந்ததை எண்ணி சிவகுமார் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

கோபத்தில் விபரீதம்: 

இந்த நிலையில், வேலை முடிந்து ஊருக்கு திரும்ப தமிழ்ச்செல்வி பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்பொழுது அவருடைய கணவர் பின்தொடர்ந்து வந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தை அறுத்து உள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் பதறி அடித்து ஓடி வந்து சிவகுமாரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தமிழ்ச்செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attempt murder in villupuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->