டீ மாஸ்டரை குறுகுறுவென பார்த்த இளைஞர்.! திடீரென ஓடிவந்து செய்த காரியம்.!
attempt murder in thirupathur
திருப்பத்தூர் மாவட்டம் அருகே கந்திலி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் கந்திலி காவல் நிலையம் அருகே இருக்கும், டீக்கடை ஒன்றில் மாஸ்டராக பணிபுரிந்து வருகின்றார். இன்று அவர் வழக்கம் போல கடையில் பணி செய்து கொண்டு இருந்தபொழுது சின்னூர் பகுதியைச் சேர்ந்த மணி என்ற 20 வயது இளைஞன் டீக்கடையில் இருக்கும் மாஸ்டரை முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது குமார் "ஏன் தம்பி என்னை பார்த்து இப்படி முறைக்கிற.?" என்று கேட்டபொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரையும் பொதுமக்கள் சமாதானப்படுத்தி இளைஞரை அனுப்பி வைத்திருக்கின்றனர். சிறிது நேரம் கழித்து கையில் கத்தியுடன் ஓடிவந்த அந்த இளைஞன் டீ மாஸ்டர் உடன் வாக்குவாதம் செய்து தன்னுடைய கையில் இருந்த கத்தியை கொண்டு வயிற்றில் குத்தி இருக்கின்றார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்து இருக்கின்றார். பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில் முன்விரோதம், பழிதீர்ப்பு சம்பவங்கள் ஏதாவது இருக்கிறதா என்று விசாரித்து வருகின்றனர்.
English Summary
attempt murder in thirupathur