பேஸ்புக்கில் போட்ட ஒற்றை பதிவு.! வாங்கிய கத்திக்குத்து., உண்டான பரபரப்பு.!!
attempt murder in nagai
கடந்த 9-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில், பொரவச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான் என்பவர் மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் சூப் சாப்பிட்ட புகைப்படத்தை பதிவிட்டு என்ன ருசி என்பது போல கேப்ஷன் கொடுத்து முகம்மது பைசான் தனது பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவினை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளார். அவர்களில் சிலர் முஹம்மது பைசானை கத்தி, இரும்பு கம்பி போன்ற கொடிய ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதன் காரணமாக முஹம்மது பைசான் மிகுந்த காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பின்னர் அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் சில இளைஞர்கள் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நாகை மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதன் தாக்குதல் நடத்தப்பட்டதிற்கு இவ்வளவு ஆத்திரப்படும் மக்கள் பலருக்கும், இறந்த அந்த மாட்டிற்கும் போனது உயிர் தான் என்பது ஏனோ தெரியவில்லை.