என்ன பாத்து ஏண்டா அப்டி கேட்ட..?! கடைக்காரருக்கு விழுந்த மரண அடி.!
ATTACK IN MADURAI BAKERY
மதுரை தல்லாகுளம் பகுதியில் கிறிஸ்டி மோசே என்ற நபர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகின்றார். நேற்று அந்த கடைக்கு சில இளைஞர்கள் சென்று கிறிஸ்டி மோசே பேக்கரியில் பப்ஸ் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளனர். சாப்பிட்டு முடித்த பின்னர், அவர்கள் காசு கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்துள்ளனர்.
அவர்கள் காசு கொடுக்காமலேயே எஸ்கேப் ஆக முயள்வதை கண்டா கிறிஸ்டி பிடித்து சாப்பிட்ட பப்ஸுக்கு காசு கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் அந்த இளைஞர்கள் கிறிஸ்டியை சரமாரியாகத் தாக்கி இருக்கின்றனர். அதில் அதீத காயம் அடைந்த கிறிஸ்டி, காவல் நிலையத்திற்குச் சென்று அந்த இளைஞர்கள் மீது புகார் கொடுத்து இருக்கின்றார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். அதில் அந்த இளைஞர்கள் கிறிஸ்டியை தாக்கியது ஒரு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட, கிறிஸ்டியை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துவிட்டு , இச்சம்பவம் தொடர்பாக 3 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.