மாணவிகளை கிண்டல்.. கண்டித்த ஆசிரியர்..! அடித்து நொறுக்கிய மாணவர்கள்.!
attack in jayangondam
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ஆரோக்கியநாதன் என்பவர் வேதியல் ஆசிரியராக இருக்கின்றார்.
அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் சில மாணவர்கள் வெளியில் இருக்கும் சிமெண்ட் கட்டை மீது அமர்ந்து வகுப்பறையில் இருக்கும் மாணவிகளை கிண்டல் செய்து கொண்டு இருந்துள்ளனர். அந்த மாணவர்களை வேதியியல் ஆசிரியர் கண்டித்து இருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று அவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது வகுப்பறைக்குள் புகுந்த அஜித் குமார் ஆகிய சில மாணவர்கள் ஆரோக்கியநாதனை தரக்குறைவாக பேசி அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி மாணவ மாணவிகள் திருச்சி சிதம்பரம் இடையேயான நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.