ஆபாசப்பட விவகாரம்: அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்.! பாயும் போலீசார்.!
ARREST FOR CHILD PORNOGRAPHY
அமெரிக்க ஆய்வின்படி குழந்தைகள் குறித்த ஆபாச படங்களை பார்ப்பது, பதிவேற்றம் செய்வது, ஷேர் செய்வது என்று இதில் முதலிடம் பிடித்திருப்பது இந்தியர்கள் தான் என்றும், அதிலும் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகபடியான குழந்தை ஆபாசப்படம் இருக்கின்றார்கள் என்றும் கூறப்பட்டது.
இதற்கான ஆய்வு முடிவுகள் இந்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டது. இது இந்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆபாச படம் பார்ப்பவர்களின் ஐபி அட்ரஸ்ஸை வைத்து அவர்கள் யார் என்பதை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் போலீசாரிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ஒருவர் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பதிவேற்றுவதாக கூறி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், தற்போது கோயம்புத்தூரில் குழந்தைகளின் ஆபாச படம் பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரென்டா பாசுமாடரி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
English Summary
ARREST FOR CHILD PORNOGRAPHY