அர்ஜுன் சம்பத் கைது..! தென்னகத்தில் பதற்றம்...!
arjun sampath arrest
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருவள்ளுவருக்கு காவித் துண்டு அணிவித்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
பிள்ளையார்ப்பட்டியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை மர்ம ஆசாமிகளால்
சேதப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் பல அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்துள்ளனர். இந்நிலையில் பலரும், திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும், அவர் மதசாற்றப்பட்டவர் என்றும் விவாதம் செய்து வருகின்றனர்.
அதன் பின்னர் பிள்ளையார்ப்பட்டியில் சேதப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பல கட்சி தலைவர்களும் அதன் பின்னர் நேரில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு தற்போது மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிள்ளையார்ப்பட்டி சென்று திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு போர்த்தி, ருத்திராட்ஷ மாலை அணிவித்து மரியாதை செந்தார். பின்னர் கும்பகோணம் வழியாக அவர் சென்று போது காவல் துறையினர் கைது செய்து தஞ்சாவூர் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதன் காரணமாக கலவரம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. தென் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.