அரியலூர்: சாமி சேலையை எரித்து, இளைஞரின் மோசமான காரியம்.! பொதுமக்கள் தர்ம அடி.!  - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் இருக்கிறது. அதில் கீழ மாளிகை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற 23 வயது இளைஞர் கோவில் சுற்று சுவரில் ஏரி குதித்து கஞ்சா போதையுடன் உள்ளே நுழைந்துள்ளார்.

அப்பொழுது தேர் சக்கர மரங்கள்,  சாமி சேலைகள் உள்ளிட்டவற்றை அவர் தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள், மின்சார பொருட்கள் உள்ளிட்டவற்றை அடித்து நாசம் செய்தார். 

சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் அவரை சுற்றி வளைக்க முயற்சித்த போது அவர் தப்பியோடி அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்குள் புகுந்தார். ஆனால், பொதுமக்கள் விரட்டிச் சென்று அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.

 இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது போதையில் இவ்வாறு செய்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalur youngster damaged temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->