அரியலூர்: காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்.. உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.!!
Ariyalur Woman Parents and Relation Protest due to Woman Love Issue
இளம்பெண் தனது காதலை சேர்த்து வைக்க மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகவே, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் அக்கா தீக்குளிக்க முயற்சி செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சார்ந்தவர் அழகு ரோஜா (வயது 21). இவர் சென்னையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதன்போது, சென்னையை சார்ந்த வல்லரசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் நட்பாக தொடர்ந்து பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், சிறுகளத்தூரில் இருந்த அழகு ரோஜா நேற்று இரவு அறியலூருக்கு வந்துள்ளார். இவர் தனது காதலருடன் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்த பேருந்து நடத்துனர், பெண்மணி வீட்டில் சண்டையிட்டு வந்ததை உறுதி செய்துள்ளார்.
இதனையடுத்து, அவரின் பாதுகாப்பு கருதி அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விஷயத்தை தெரிவித்து ஒப்படைத்துள்ளார். அழகு ரோஜாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு இருக்கையில், வல்லரசும் அரியலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதன் முடிவாக, நீங்கள் தான் எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என காதல் ஜோடி தஞ்சம் கேட்டுள்ளது. இதனைக்கேட்ட அதிகாரிகள் காலை பேசிக்கொள்ளலாம் என வல்லரசை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இன்று காலை இந்த தகவலை அறிந்த அழகு ரோஜாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். மேலும், ரோஜாவின் அக்கா உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
அவரை அதிகாரிகள் மீட்ட நிலையில், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை, பெண்ணிடம் உறவினர்கள் பேசி பார்த்தும் பலனில்லை என்பதால், பெண்ணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க காவல் அதிகாரிகள் திட்டமிட்டு உறவினர்களிடம் தகவலை தெரியப்படுத்தினர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ariyalur Woman Parents and Relation Protest due to Woman Love Issue