ஆட்டோ - லோடு வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 2 பெண்கள் பலி.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி ரெட்டிபாளையம் கிராமத்தை சார்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி சந்திரா (வயது 50). சந்திரா அப்பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர்களின் மகன் மணிகண்டன் (வயது 24). மணிகண்டன் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். 

காசிநாதன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், சந்திரா தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சந்திரா, மணிகண்டன், பக்கத்து வீட்டில் வசித்து வரும் பவுனம்மாள் (வயது 65), மணிகண்டனின் நண்பர் நித்தியானந்தம் (வயது 54) ஆகியோர் வி.கைகாட்டி பகுதியில் இருந்து உடையார்பாளையம் பெரியகோவிலுக்கு புறப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் ஆட்டோவில் கோவிலுக்கு சென்ற நிலையில், ஆட்டோவை அங்குள்ள சுண்டக்குடி கிராமத்தை சார்ந்த சிற்றரசு (வயது 28) என்பவர் இயக்கியுள்ளார். இவர்களின் வாகனம் உடையார்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே செல்கையில், கடைகளுக்கு பாலை இறக்கிவிட்டு வந்த வேன் - ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த சந்திரா, பவுனம்மாள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், மணிகண்டன், நித்தியானந்தம், சிற்றரசு, வேன் ஓட்டுநர் ரஞ்சித் (வயது 27) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவாகனத்தின் முன்புறமும் அப்பளம் போல நொறுங்கியது. 

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த உடையார்பாளையம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜசக்கரவர்த்தி தலைமையிலான காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur V Kaikatti Auto Accident 2 Aged Women Died 10 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->