செந்துறை: தடுப்பணையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சார்ந்த 3 குழந்தைகள் மரணம்.. உறவினர்கள் கண்ணீர்.! - Seithipunal
Seithipunal


தடுப்பணையில் உள்ள நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சார்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை மனப்பத்தூர் கிராமத்தை சார்ந்த ஒரே குடும்ப சிறுவர்கள் சுருதி (வயது 9), சுடர்விழி (வயது 7), ரோஹித் (வயது 6). இவர்கள் மூவரும் இன்று அங்குள்ள மனப்பத்தூர் தடுப்பணை பகுதிக்கு சென்றுள்ளனர். 

அங்கு வயல்வெளி பகுதியில் மேய்ந்துகொண்டு இருந்த மாடுகளை பார்த்து ரசித்தபடியே இருந்த சிறுவர்களில் ஒருவர் எதிர்பாராத விதமாக நீருக்குள் விழுந்ததாக தெரியவருகிறது. இதனையடுத்து சிறுவனை காப்பாற்ற இருவரும் அடுத்தடுத்து நீரில் விழுந்துள்ளார். 

இதன்போது, மூவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீரில் குழந்தைகள் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், விரைந்து செல்வதற்குள் மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் குழந்தைகளின் உடலை மீட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Sendurai 3 Child Died in Small Reservoir Dam Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->