அரியலூர்: திருச்சியில் கல்யாணம்.. ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் காதல் புறாக்கள் கண்ணீர் கதறல்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள நந்தியான்குடிகாடு பகுதியை சார்ந்த பெண்மணி சிவசங்கரி (வயது 19). இவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். இதே பகுதியை சார்ந்தவர் முத்துச்செல்வம். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. 

ஆத்திரமடைந்த இருதரப்பு பெற்றோர்களும், இவர்களின் காதலிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடிகள் வீட்டினை விட்டு வெளியேறி திருச்சிக்கு வந்து கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளார். 

பின்னர் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடையவே, அவர்கள் அரியலூர் மாவட்ட காவல் நிலையத்திற்கு செல்ல கூறியுள்ளனர். ஆனால், அங்கு சென்றால் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, காதல் ஜோடிகள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு முன்னர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Love Couple Stay SriRangam Police Station due to Parents Fear


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->