அரியலூர்: தேனியில் வாங்கி கஞ்சா குடிகாரன்களுக்கு டோர் டெலிவரி.. வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு, இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் போது, சாலையில் நின்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை அழைத்து விசாரித்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரிடமிருந்து வாங்கிய பையை சோதனை செய்ததில், அதில் ஒரு கிலோ கஞ்சா இருந்துள்ளது. 

இதனையடுத்து வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலணிக்குழி கிராமத்தைச் சார்ந்த ஜெயப்பிரகாஷ் என்பதும், தேனி மாவட்டத்திலுள்ள போடி பகுதியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. 

மேலும், இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சா குடிக்கிகளுக்கு டோர் டெலிவரி செய்வதும் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து ஜெயபிரகாஷை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Ganja Sales Culprit Arrest By Police 9 Jan 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->