#Breaking: முதல் நாளே சிறப்பான சம்பவம்.. மொத்தமாக தூக்கிய பறக்கும் படை...!
Ariyalur Flying Squad Captured Cooker Prize TTV Dhinakaran Party
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன்போது, மக்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையமும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பறக்கும்படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அட்டைப்பெட்டியுடன் குக்கரை ஏற்றிச்சென்ற லாரியை பறக்கும்படையினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.
சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருந்து அரியலூருக்கு கொண்டு செல்லப்பட்ட குக்கர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.12 இலட்சம் மதிப்புள்ள 3 லிட்டர் அளவுள்ள 3250 குக்கர் பரிசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமமுக வழக்கறிஞர் அணி செயலாளர் வேலு கார்த்திகேயன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ariyalur Flying Squad Captured Cooker Prize TTV Dhinakaran Party