தாயிடம் சண்டையிட்டு சென்ற சிறுமியை நயவஞ்சகமாக பேசி ஏமாற்றி பலாத்காரம் செய்த காமுகன்..!
Ariyalur Child Girl Sexual Abused By Culprit Thanjavur Rajasekar Police Arrest and Jailed
தாயிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி காமுகனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் காமுகன் கைது செய்யப்பட்டான்.
அரியலூர் நகர் பகுதியை சார்ந்த 11 ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருக்கையில் அதிக நேரம் செல்போன் உபயோகம் செய்து வந்துள்ளார். இதனைகவனித்த சிறுமியின் தாயார், படிப்பில் நாட்டம் செலுத்துமாறு கண்டித்து இருக்கிறார்.
இதனால் மனமுடைந்து போன சிறுமி தாயிடம் சண்டையிட்டு அழுதுகொண்டே பேருந்து நிலையத்திற்கு சென்று தஞ்சாவூர் சென்றுள்ளார். தஞ்சாவூர் சென்ற சிறுமி தனிமையில் செய்வதறியாது நின்று கொண்டு இருக்கவே, இதனைக்கவனித்த காமுகன் ராஜசேகர் என்பவன் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்துள்ளான்.
காமுகனின் பின்புலம் தெரியாது சிறுமியும் அவனிடம் நடந்ததை கூற, ஆறுதலாக பேசுவது போல சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற காமுகன் ராஜசேகர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவனிடம் இருந்து எப்படியோ தப்பித்த சிறுமி, வீட்டிற்கு வந்து தாயாரிடம் நடந்ததை கூறியிருக்கிறார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் காமுகன் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வீட்டில் இருக்கும் சிறுமிகள் பெற்றோர்கள் கண்டித்தால் அவர்களிடம் சண்டையிட்டு வீட்டுக்குளேயாவது இருங்கள், ஆவேசத்தில் நீங்கள் வெளியே சென்றால், உங்களுக்கு அறிமுகமாகும் நபரின் குணம் அவரால் பாதிக்கப்படும்போது மட்டுமே தெரியவரும் என்றும் எச்சரிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ariyalur Child Girl Sexual Abused By Culprit Thanjavur Rajasekar Police Arrest and Jailed