அரியலூர்: தடுப்பணையில் 3 பிஞ்சுகள் உயிரிழந்த விவகாரம்.. 5 மாத தடுப்பணையின் கட்டுமான அவலம்.! - Seithipunal
Seithipunal


செந்துறை அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாழடைந்த தடுப்பணை குட்டையில் விழுந்த 3 குழந்தைகள் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மனப்பத்தூர் கிராமத்தைச் சார்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த அண்ணன் தம்பிகளான சுதாகர், மைக்கேல் ஆகியோரது குழந்தைகள் 7 வயது மகள் சுடர்விழி, 9 வயது மகள் சுருதி, ஆறு வயது மகன் ரோகித். 

இவர்கள் மூவரும் நேற்று விளையாடச் சென்ற நிலையில், குழந்தைகள் மூன்று பேரும் புதிதாக கட்டப்பட்ட உடைந்த தடுப்பணையில் விளையாடிக்கொண்டிருந்தனர். இதன்போது, ரோஹித் எதிர்பாராத விதமாக குட்டையில் சறுக்கி விழுந்துள்ளார்.

குட்டையில் விழுந்த தம்பியை மீட்க போராடிய இரண்டு அக்காவும், அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளை காணாது பதறிப்போன பெற்றோர்கள், குழந்தைகளை தேடுகையில் ரோஹித்தின் உடல் தடுப்பணையில் மிதந்து உள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குட்டையில் இறங்கி குழந்தைகளை தேடியபோது பத்தடி ஆழத்தில் குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. 3 குழந்தைகளின் உடலை மீட்ட குடும்பத்தினர், அவர்களின் உடலை பார்த்து கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக ரூபாய் 15 லட்சம் மதிப்பில் தரமற்ற முறையில் இந்த தடுப்பணை கட்டப்பட்டதாகவும், மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தாக்குப் பிடிக்காமல் உடைந்து சரிந்து இருந்ததாகவும் அப்பகுதிவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். தரமற்ற வகைகள் அணையை கட்டிய சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Child Died in Water Dam Reservoir Contractor Make Rubbish Reservoir Corruption


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->