அமைச்சர் ஏ.வ வேலுவை ஒருமையில் பேசிய விவகாரம்..!! அதிமுக - திமுக நிர்வாகிகளிடையே வாக்குவாதம்..!! ஆரணியில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்த ஆரணியில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகி பாரி பாபு அதிமுக அமைச்சர் ஏ.வ வேலுவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் ஆரணி மார்க்கெட் பகுதியில் உள்ள பாரி பாபுவின் இனிப்பு கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக அதிமுகவினரும் திமுகவினரும் இடையே வாக்குவாதம் முற்றியது. இரு கட்சி நிர்வாகிகளும் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பான சூழல் உண்டானது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் திமுகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக நிர்வாகி பாரி பாபுவும், டீ குடிக்க சென்ற தங்களை பாரி பாபு தர குறைவாக பேசியதாக திமுகவினரும் ஆரணி நகர காவல்நிலத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Argument between AIADMK DMK executives in Arani


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->